🔗

திர்மிதி: 2885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بَيْنَمَا رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الكَهْفِ إِذْ رَأَى دَابَّتَهُ تَرْكُضُ، فَنَظَرَ فَإِذَا مِثْلُ الغَمَامَةِ أَوِ السَّحَابَةِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ مَعَ القُرْآنِ، أَوْ نَزَلَتْ عَلَى القُرْآنِ»


2885. பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது)அத்தியாயத்தைத் (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் குதிரை மிரளுவதைப் பார்த்தார். அவர் என்னவென்று நாலாபுறமும் பார்க்கும்போது மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. (விடிந்தவுடன்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.