🔗

திர்மிதி: 2905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ، فَأَحَلَّ حَلَالَهُ، وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ»


2905. எவர் குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு, அதில் அனுமதிக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவே கருதி, அதில் தடுக்கப்பட்டதை தடுக்கப்பட்டதாகவே கருதி செயல்படுகிறாரோ, அவரை அல்லாஹ் அதன் மூலம் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும், அவரது குடும்பத்தில் நரகம் கட்டாயமான பத்து பேருக்கு அவர் பரிந்துரை செய்ய அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்தது. இந்த ஒரு வகை அறிவிப்பாளர்தொடர் தவிர வேறு வழியில் இதை நாங்கள் அறியவில்லை. மேலும், இதற்கு (வேறு) சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான்-அபூஉமர் பஸ்ஸாஸ் கூஃபீ என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கருதப்படுகிறார்.