«مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
பாடம்:
அல்குர்ஆனுக்கு (அதன் ஞானமின்றி) சுயவிளக்கம் அளிப்பவனுக்குரிய தண்டனை குறித்து வந்துள்ளவை.
2950. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
யார் குர்ஆனில் (அதன் வசனங்கள் குறித்த) ஞானமின்றி (அதற்கு) சுயவிளக்கமளிக்கிறாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)