«اتَّقُوا الحَدِيثَ عَنِّي إِلَّا مَا عَلِمْتُمْ،
فَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ،
وَمَنْ قَالَ فِي القُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
2951. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஹதீஸ் அறிவிப்பதை பயந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு உறுதியாக தெரிந்ததைத் தவிர!
என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
யார் குர்ஆனுக்கு சுயவிளக்கம் கூறுகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.