{وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالمُؤْمِنَاتِ} [محمد: 19]
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي اليَوْمِ سَبْعِينَ مَرَّةً»
وَيُرْوَى عَنْ أَبِي هُرَيْرَةَ أَيْضًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»، رَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ
3259. அபூஹுரைரா (ரலி) அவர்கள், உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! (அல்குர்ஆன்-47:19) என்ற வசனத்தை பற்றி கூறும் போது, “நான் ஒரு நாளில் எழுபது தடவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அபூஸலமாவிடமிருந்து, முஹம்மது பின் அம்ர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் நான் ஒரு நாளில் நூறு தடவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று வந்துள்ளது.