أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى القَمَرِ، فَقَالَ: «يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا، فَإِنَّ هَذَا هُوَ الغَاسِقُ إِذَا وَقَبَ»
பாடம்:
பாதுகாப்புத் தேடப் பயன்படும் அல்ஃபலக், அந்நாஸ் (113, 114 ஆவது) அத்தியாயங்களின் விளக்கவுரை.
3366. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சந்திரனை பார்த்துவிட்டு, “ஆயிஷாவே! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுதான் மூடிக்கொள்ளும் இருள் (அதாவது அதிவேகமாக இருள் பரவும்போது ஏற்படும் தீங்கு) ஆகும்” என்று (என்னிடம்) கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.