🔗

திர்மிதி: 3369

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

لَمَّا خَلَقَ اللَّهُ الأَرْضَ جَعَلَتْ تَمِيدُ، فَخَلَقَ الجِبَالَ، فَقَالَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ، فَعَجِبَتِ المَلَائِكَةُ مِنْ شِدَّةِ الجِبَالِ. قَالُوا: يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الجِبَالِ؟

قَالَ: نَعَمُ الحَدِيدُ.  قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الحَدِيدِ؟ قَالَ: نَعَمُ النَّارُ. فَقَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ النَّارِ؟ قَالَ: نَعَمُ المَاءُ.

قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ المَاءِ؟ قَالَ: نَعَمُ الرِّيحُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ؟

قَالَ: نَعَمْ ابْنُ آدَمَ، تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ “: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


3369. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ் பூமியை படைத்தபோது, அது நடுங்க ஆரம்பித்தது. அல்லாஹ் மலைகளைப் படைத்து பூமி ஆடாமல் நிலைநிறுத்தினான். மலைகளின் பலத்தைக் கண்டு வானவர்கள் வியப்புற்று, “ எங்கள் இறைவனே! நீ படைத்தவற்றுள் இந்த மலைகளை விட பலமானது ஏதும் உண்டா?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ், “ஆம்! இரும்பு”என்றான்.

“ இறைவனே! இரும்பை விட பலமானது ஏதேனும் உண்டா?” என்று மீண்டும் கேட்டார்கள், “ ஆம்! உண்டு. அது நெருப்பு!’என்று அல்லாஹ் கூறினான். “இந்த நெருப்பை விட பலமானது ஏதேனும் உண்டா? “ என்று கேட்ட போது, “ஆம்! அது தண்ணீர்!” என்று கூறினான். இந்த தண்ணீரை விட பலமானது உண்டா? என்று கேட்டதற்கு, “ ஆம்! அது காற்று!” என்று அல்லாஹ் கூறினான்.

இந்த பலமான காற்றை விட பலமானது உண்டா? என்று கேட்டபோது, “ ஆம்! உண்டு, அது ஆதமுடைய மகனானவன். தன் இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமாகும்!’ என்று அல்லாஹ் கூறியதாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.