أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي، قَالَ: «عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ، قَالَ: «اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»
3445. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணம் செல்லவிருக்கிறேன். எனக்கு (ஏதேனும்) உபதேசியுங்கள்! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறையச்சத்தையும், மேடான பகுதியில் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதையும் பற்றிப்பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.
(பிறகு) அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அவருக்கு பயணத்தொலைவை சுருக்கிவிடு; பயணத்தை எளிதாக்கு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)