🔗

திர்மிதி: 3461

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا قَفَلْنَا أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ فَكَبَّرَ النَّاسُ تَكْبِيرَةً وَرَفَعُوا بِهَا أَصْوَاتَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَصَمَّ وَلَا غَائِبٍ، هُوَ بَيْنَكُمْ وَبَيْنَ رُءُوسِ رِحَالِكُمْ»، ثُمَّ قَالَ: ” يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَلَا أُعَلِّمُكَ كَنْزًا مِنْ كُنُوزِ الجَنَّةِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ “.


3461. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் திரும்பி வந்து மதீனாவை நெருங்கியபோது, மக்கள் தக்பீர் கூறத் தொடங்கினர், அவர்களின் குரல்களை உயர்த்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக உங்கள் இறைவன் செவிடன் அல்ல. அவன் உங்களைவிட்டுத் தொலைவிலும் இல்லை. அவன் உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான்” என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் புதையல்களில் இருந்து ஒரு புதையலை நான் உங்களுக்குக் கற்றுத்தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதில் இடம்பெறும் அபூஉஸ்மான் அன்னஹ்தீ என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் முல் ஆகும். அபூநஆமா என்பவரின் பெயர் அம்ர் பின் ஈஸா ஆகும்.

உங்களுக்கு இடையிலும் உங்கள் பயணப் பெட்டிகளின் தலைப்பக்கத்திலும் உள்ளான் என்பதன் கருத்து, அவனது அறிவும் ஆற்றலும் ஆகும்.