عَدَّهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِي أَوْ فِي يَدِهِ: «التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ»
3519. பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த (நபித்தோழர்) ஒருவர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையில் அல்லது அவர்களுடைய கையில் (விரல்களை மடக்கி) பின்வருமாறு எண்ணிக் கூறினார்கள்:
1 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று துதிப்பது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பிவிடும்.
2 . அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! என்று துதிப்பது) நன்மையின் தராசை நிரப்பிவிடும்.
3 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று துதிப்பது) வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டதை நிரப்பிவிடும்.
4 . நோன்பு பொறுமையின் பாதியாகும்.
5 . தூய்மை இறைநம்பிக்கையின் பாதியாகும்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஹதீஸை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோரும் அறிவித்துள்ளனர்.