” مَنْ قَالَ عَشْرَ مَرَّاتٍ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَانَتْ لَهُ عِدْلَ أَرْبَعِ رِقَابٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ “
3553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் பத்து முறை, ‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்’ (பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன்) என்று சொல்கிறாரோ, அவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் நான்கு அடிமைகளை விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.