دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهَا، قَالَ: «لَقَدْ سَبَّحْتِ بِهَذِهِ، أَلَا أُعَلِّمُكِ بِأَكْثَرَ مِمَّا سَبَّحْتِ؟» فَقُلْتُ: بَلَى عَلِّمْنِي. فَقَالَ: ” قُولِي: سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ
3554. நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் அதைக் கற்றுக் கொடுங்கள் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹீ என்று நீ சொல்” என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியை ஹாஷிம் பின் ஸயீத் அல்கூஃபீ என்பவர் (மட்டுமே) ஸஃபிய்யா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இந்த அறிவிப்பாளர்தொடர் அறியப்பட்டதல்ல.
இப்பொடப்பொருள் தொடர்பான செய்தி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அபூதாவூத்-1503)