ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالإِمَامُ العَادِلُ، وَدَعْوَةُ المَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ
3598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.
1 . நோன்பாளி நோன்புத் துறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை.
2 . நீதமான அரசனின் பிரார்த்தனை.
3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. அல்லாஹ், அதை மேகத்திற்கு மேலாக உயர்த்தி அதற்காக வானத்தின் கதவுகளை திறக்கிறான். மேலும், “எனது கண்ணியத்தின் மீது ஆணையாக! சிறிது நேரத்திற்குள் உனக்கு உதவி செய்கிறேன்” என்று கூறுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இதில் இடம்பெறும் ஸஃதான் அல்குப்பீ என்பவர் ஸஃதான் பின் பிஷ்ர் ஆவார். இவரிடமிருந்து ஈஸா பின் யூனுஸ், அபூஆஸிம் மற்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் பலரும் அறிவிப்பு செய்துள்ளனர்.
மேலும் இதில் இடம்பெறும் அபூமுஜாஹித் என்பவர் ஸஃத் அத்தாஈ ஆவார்.
மேலும் இதில் இடம்பெறும் அபூமுதில்லா என்பவர், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாவார். இவரை இந்த ஹதீஸ் மூலமாகவே நாம் அறிந்து கொள்கிறோம். மேலும் இவரிடமிருந்து இந்த ஹதீஸ் இதைவிட நீளமாகவும் முழுமையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.