🔗

திர்மிதி: 3599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا، الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ»


3599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மன்ஃபஃனீ பிமா அல்லம்தனீ, வ அல்லிம்னீ மா யன்ஃபஉனீ, வஸித்னீ இல்மா, அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். வ அஊது பில்லாஹி மின் ஹாலி அஹ்லின்னார்” என்று கூறி பிரார்த்தனை செய்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நீ எனக்கு எதனைக் கற்றுத் தந்தாயோ அதனைக் கொண்டு எனக்குப் பயனளிப்பாயாக! மேலும், எனக்கு எது பயனளிக்குமோ அதனை எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக! என் கல்வியறிவை அதிகப்படுத்துவாயாக! அனைத்து நிலைகளிலும் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரித்தாகுக. நரகவாசிகளின் நிலையிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” ஆகும்.