«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي، وَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْهُمْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا»
3602. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்கப்படும் பிரார்த்தனை ஒன்று உள்ளது. நான் என் பிரார்த்தனையை என் சமுதாயத்தினருக்குப் பரிந்துரை செய்வதற்காக சேமித்து வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் அவர்களில் யார் அல்லாஹ்விற்கு யாதொரு இணையும் வைக்காமல் மரணமடைந்தாரோ அவருக்கு அது கிடைக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.