🔗

திர்மிதி: 366

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ»

قَالَ شُعْبَةُ: ثُمَّ حَرَّكَ سَعْدٌ شَفَتَيْهِ بِشَيْءٍ، فَأَقُولُ: حَتَّى يَقُومَ؟، فَيَقُولُ: حَتَّى يَقُومَ،


366. நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத் இருப்பில்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

இதன் அறிவிப்பாளரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: பிறகு (இதை அறிவித்த) ஸஃத் (ரஹ்) அவர்கள் தம் உதடுகளை ஏதோ ஒன்றைச் சொல்வதற்காக அசைத்தார்கள். அப்போது நான், “அவர்கள் உடனே எழுந்துவிடுவார்கள் தானே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அவர்கள் உடனே எழுந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். என்றாலும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், தனது தந்தையான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து, நேரடியாக எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.

மேற்கண்ட நபிமொழியின்படியே செயல்படவேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். (இரண்டு அத்தஹிய்யாத் அமர்வு இருக்கும் தொழுகைகளில்) முதல் அமர்வில் நீண்ட நேரம் அமரக்கூடாது; அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதக்கூடாது என்பது இவர்களின் கருத்தாகும்.

ஒருவர் அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதினால் அவர் மறதிக்கான இரு ஸஜ்தா செய்வது அவசியம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.