🔗

திர்மிதி: 3839

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالبَرَكَةِ. فَقَالَ لِي: ” خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا، أَوْ فِي هَذَا المِزْوَدِ، كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فِيهِ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا، فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ، فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ


3839. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவற்றில் (பரக்கத் எனும்) அபிவிருத்தி உண்டாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பழங்களை ஒன்று சேர்த்து, அதற்காக பரக்கத் உண்டாகும்படி துஆ செய்தார்கள். பிறகு என்னிடம், “இந்தப் பழங்களை உமது பையில் போட்டுக்கொள். அதில் இருந்து எதையாவது எடுக்க நினைக்கும்போது, பையினுள் உனது கையை விட்டு எடுத்துக்கொள். அவற்றை கீழே சிதறிவிடாதே” என்று கூறினார்கள்.

அந்தப் பழங்களில் இருந்து அல்லாஹ்வின் பாதையில் இத்தனை இத்தனை வஸக்குகள் என நான் எடுத்துச் சென்றேன். நாங்கள் அதில் இருந்து சாப்பிட்டோம். பிறருக்கும் உண்ணக் கொடுத்தோம். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடந்த நாள் வரை அந்தப் பை என்னுடைய இடுப்பை விட்டு பிரியாமல் இருந்தது. அவர்கள் கொல்லப்பட்ட அந்த நாளில்தான் அது இல்லாமல் போனது.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் இந்த வகை அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் உள்ளதாகும். மேலும், அபூஹுரைரா (ரலி) வழியாக இந்த ஹதீஸ் வேறொரு வகை அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.