🔗

திர்மிதி: 3973

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


பாடம்:

3973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்தளவுக்கெனில் தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்க வேண்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இந்தச் செய்தியை பலரும் ஜஅஃபர் பின் ஸுலைமான் —> ஸாபித் அல்புனானீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் இதில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.