🔗

திர்மிதி: 433

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ ‏.‏ قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ


398 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவிலும் பகலிலும் பத்து ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுததை நான் நினைவில் வைத்துள்ளேன். அவை: ‘லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு, மகரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரக்அத்கள். ‘இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என  ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.