🔗

திர்மிதி: 510

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ؟»، قَالَ: لَا، قَالَ: «قُمْ فَارْكَعْ [ص:385]»


இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வருபவர், இரண்டு ரக்ஆத்துகள் தொழ வேண்டும் என்பது குறித்த பாடம்.

510. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (குத்பா) உரையாற்றி கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்கு) வந்(து தொழாமல் அமர்ந்)தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது உரையினிடையே). “நீர் தொழுது விட்டீரா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “எழுந்து, தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.