«إِذَا نَعَسَ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ»
பாடம்:
வெள்ளிக்கிழமையன்று சிறுதூக்கம் வருபவர் தனது இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
526. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு ஜும்ஆ நாளில் (ஜும்ஆ உரையின் போது) தூக்கக் கலக்கம் ஏற்பட்டால், அவர் தன் அந்த அமரும் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.