«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخْرِجُ الأَبْكَارَ، وَالعَوَاتِقَ، وَذَوَاتِ الخُدُورِ، وَالحُيَّضَ فِي العِيدَيْنِ»، فَأَمَّا الحُيَّضُ فَيَعْتَزِلْنَ المُصَلَّى، وَيَشْهَدْنَ دَعْوَةَ المُسْلِمِينَ، قَالَتْ إِحْدَاهُنَّ: يَا رَسُولَ اللَّهِ، إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ، قَالَ: «فَلْتُعِرْهَا أُخْتُهَا مِنْ جَلَابِيبِهَا»،
பாடம்:
இரு பெருநாட்களிலும் பெண்கள் (தொழுகைக்குப்) புறப்பட்டுச் செல்வது
539. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாட்களிலும் கன்னிப் பெண்களையும், பருவமடைந்த பெண்களையும், திரைமறைவில் வாழும் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் (பெருநாள் திடலுக்குப்) புறப்படச் செய்பவர்களாக இருந்தார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழும் திடலை விட்டு விலகி நின்று, முஸ்லிம்களின் நல்ல காரியங்களிலும் அவர்களின் பிரார்த்தனைகளிலும் பங்கேற்பார்கள். அப்போது பெண்மணிகளில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருக்கு அணிவதற்கு மேலங்கி இல்லை என்றால் (என்ன செய்வது)?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவருடைய சகோதரி தனது மேலங்கிகளிலிருந்து ஒன்றை அவருக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)