🔗

திர்மிதி: 541

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ يَوْمَ العِيدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِهِ»


பாடம்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று, மற்றொரு வழியில் திரும்பியது குறித்து வந்துள்ளவை.

541. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரு வழியில் (தொழுகைக்குப்) புறப்பட்டுச் சென்றால், மற்றொரு வழியிலேயே திரும்புபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அபூராஃபிஃ (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

…அபூதுமைலா (ரஹ்), யூனுஸ் பின் முஹம்மத் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை ஃபுலைஹ் பின் ஸுலைமான் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஸயீத் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்) அவரிடமிருந்து, அவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாகவும் அறிவித்துள்ளனர்…

மார்க்க அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸைப் பின்பற்றி, இமாம் (பெருநாள் தொழுகைக்கு) ஒரு வழியில் சென்றால் மற்றொரு வழியில் திரும்புவதை விரும்பத்தக்கதாகக் கருதியுள்ளனர். இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பே மிகவும் ஆதாரப்பூர்வமானது போல் தெரிகிறது.