نَحْوَهُ بِلَفْظِهِ،
569. ஹதீஸ் எண்-568 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர், திர்மிதீ-568 இல் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை விட மிகச் சரியானது (உண்மையானது) ஆகும்.
அபுத்தர்தா (ரலி) அறிவிக்கும் இந்த செய்தி, உமர் பின் ஹய்யான் அத்திமஷ்கீ எனும் (தரம் அறியப்படாத) அறிவிப்பாளரிடமிருந்து ஸயீத் பின் அபூஹிலால் (ரஹ்) வழியாக மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம். ஆகவே, இது “ஃகரீப்” எனும் வகையைச் சேர்ந்த ஹதீஸ் ஆகும்.
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.