إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا، يُقَالُ لَهُ: الوَلَهَانُ، فَاتَّقُوا وَسْوَاسَ المَاءِ “،
பாடம்:
உளூச் செய்யும் போது தண்ணீரை வீணாக்குவது வெறுக்கத்தக்கச் செயல்.
57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உளூச் செய்யும் போது (ஊசலாட்டத்தை ஏற்படுத்தும்) ஒரு ஷைத்தான் இருக்கிறான். அவனுக்கு ‘வலஹான்’ என்று சொல்லப்படும். எனவே, தண்ணீரில் ஏற்படும் (வீணாக்குதல் போன்ற) ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானதாகவோ அல்லது சரியானதாகவோ இல்லை. ஏனெனில், காரிஜா பின் முஸ்அப் என்பவரைத் தவிர வேறு யாரும் இதை அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை.
மேலும் இந்த ஹதீஸ் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களின் சொல்லாக வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தச் செய்தியும் சரியானதல்ல. காரிஜா என்பவர் எமது ஆசிரியர்களின் பார்வையில் பலமானவர் அல்ல. இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.