نَحْوَهُ،
599. ஹதீஸ் எண்-588 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
நபி (ஸல்) அவர்கள் பகலில் தொழுத உபரித் தொழுகை குறித்து அறிவிக்கப்பட்ட செய்திகளில், இதுவே மிகச் சிறந்ததாகும் என்று இஸ்ஹாக் பின் இப்ராஹிம்-இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் கூறினார்.
இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது எனக் கூறினார். அவர் ஏன் அப்படி கூறினார் என்றால் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) இந்த ஹதீஸ் ஆஸிம் பின் ளம்ரா —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது. வேறு எந்த வழியிலும் இது அறிவிக்கப்படவில்லை. எனினும், சில ஹதீஸ்துறை அறிஞர்கள் ஆஸிம் பின் ளம்ராவை நம்பகமானவர் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அலீ பின் மதீனி (ரஹ்) கூறினார்:
“ஹாரிஸ் என்பவரின் ஹதீஸை விட ஆஸிம் பின் ளம்ராவின் ஹதீஸ் சிறந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்” என்று ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் கூறினார் என யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறினார்.