«أُمَّتِي يَوْمَ القِيَامَةِ غُرٌّ مِنَ السُّجُودِ، مُحَجَّلُونَ مِنَ الوُضُوءِ»
பாடம்: 75
மறுமை நாளில் இந்தச் சமுதாயத்தாரின் சிறப்பு அடையாளம், அவர்கள் செய்த அங்கத்தூய்மை மற்றும் ஸஜ்தாவின் அறிகுறிகள்தான் என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.
607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தார் (உலகில்) ‘ஸஜ்தா’ செய்ததன் காரணமாக முகம் வெண்மையானவர்களாகவும், அங்கத்தூய்மை (உளூ) செய்ததன் காரணமாக (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாவும் மறுமை நாளில் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.