🔗

திர்மிதி: 620

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

قَدْ عَفَوْتُ عَنْ صَدَقَةِ الخَيْلِ وَالرَّقِيقِ، فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ


620. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் குதிரை, மற்றும் அடிமைகளுக்குரிய ஸகாத்தை (உங்களுக்கு) மன்னித்து விட்டேன். ஆகையால், வெள்ளிக்குரிய ஸகாத்தை மட்டும் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாற்பது திர்ஹம்களுக்கு ஒரு திர்ஹம் (ஸகாத்தாகும்). நூற்றுத் தொண்ணூறு (திர்ஹம்களுக்கு) ஸகாத் எதுவும் இல்லை. அது இருநூறு திர்ஹம்களை அடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹம்கள் (ஸகாத்தாகும்).

அறிவிப்பவர்: அலீ (ரலி)