اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ مِنْهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: «إِنَّ المَاءَ لَا يُجْنِبُ».
பாடம்:
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதற்கு அனுமதி.
65. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக வந்த போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன் என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அதனால்) தண்ணீர் பெருந்துடக்குள்ளதாக-தூய்மையற்றதாக ஆகிவிடாது” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
…