🔗

திர்மிதி: 65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ مِنْهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: «إِنَّ المَاءَ لَا يُجْنِبُ».


பாடம்:

பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதற்கு அனுமதி.

65. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். ‎அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக வந்த ‎போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன் ‎என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அதனால்) தண்ணீர் பெருந்துடக்குள்ளதாக-தூய்மையற்றதாக ஆகிவிடாது” என்று  ‎பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)