«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ»
பாடம்: 44
(வாரம்வாரம்) திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது பற்றி வந்துள்ளவை.
745. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், ஹஃப்ஸா (ரலி), அபூகதாதா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
ஆயிஷா (ரலி) வழியாக வந்துள்ள இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.