«تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»
747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தப் பாட பொருளில் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ள, அரிதான செய்தியாகும்.