🔗

திர்மிதி: 761

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«يَا أَبَا ذَرٍّ، إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»


761. அபூதர்ரே! நீர் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைப்பதாக இருந்தால், பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு வைத்துக்கொள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூகதாதா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), குர்ரா பின் இயாஸ் அல்முஸனீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), அபூஅக்ரப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), கதாதா பின் மில்ஹான் (ரலி), உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி), ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவர் போன்றவராவார்” என்ற கருத்திலும் சில ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.