«نَحَرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الحُدَيْبِيَةِ البَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَالبَدَنَةَ عَنْ سَبْعَةٍ»
وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ.: «حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ: يَرَوْنَ الجَزُورَ عَنْ سَبْعَةٍ، وَالبَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ، وَالشَّافِعِيِّ، وَأَحْمَدَ
وَرُوِي عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّ البَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَالجَزُورَ عَنْ عَشَرَةٍ» وَهُوَ قَوْلُ إِسْحَاقَ، وَاحْتَجَّ بِهَذَا الحَدِيثِ، وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ وَجْهٍ وَاحِدٍ “
பாடம்:
(குர்பானியில்) ஒட்டகம், மாடு ஆகியவற்றில் கூட்டுச் சேர்தல்.
904. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபிய்யா ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் (சென்றபோது), ஒரு மாட்டையும், ஒரு ஒட்டகத்தையும் தலா 7 பேருக்குப் பதிலாக அறுத்துப் பலியிட்டோம்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ், ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களிடையே இதன்படியே செயல்பாடு உள்ளது. அவர்கள் ஒட்டகத்தையும் மாட்டையும் தலா ஏழு பேருக்குப் பதிலாக அறுப்பதைச் சரியானதாகக் கருதுகின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷாஃபிஈ, அஹ்மத் ஆகியோரின் கருத்தாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக, “மாடு ஏழு பேருக்கும், ஒட்டகம் பத்து பேருக்கும் ஈடாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இஸ்ஹாக் அவர்களின் கருத்தாகும்; அவர் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்கிறார். ஆயினும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஒரே ஒரு அறிவிப்பாளர் வழியாகவே நாம் அறிந்துள்ளோம்.