«مَا مِنْ شَيْءٍ يُصِيبُ المُؤْمِنَ مِنْ نَصَبٍ، وَلَا حَزَنٍ، وَلَا وَصَبٍ حَتَّى الهَمُّ يَهُمُّهُ إِلَّا يُكَفِّرُ اللَّهُ بِهِ عَنْهُ سَيِّئَاتِهِ»
966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒருவருக்கு ஏற்படும் உடல் வலி (காயம்), மன உளைச்சல், நாட்பட்ட நோய், உருக்கும் மனக்கவலை ஆகிய எதுவாயினும், அதை அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பாக வந்துள்ள செய்திகளில் இது “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.
கவலைகள் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்ற செய்தி இந்த ஹதீஸில் தவிர வேறெதிலும் செவியுறப்பட வில்லை” என வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஜாரூத் (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
இதே ஹதீஸைச் சிலர் அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.