«إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
பாடம்: 236
(கூட்டுத் தொழுகையில் இருக்கும் போது) உளூ முறிந்தவர், (தொழுகையிலிருந்து வெளியேற) இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்?
1114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இமாமுடன் தொழும் போது) உங்களில் ஒருவருக்கு உளூ முறிந்து விட்டால் அவர், மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழுகையிலிருந்து வெளியேறி விடட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்களும், அபூஉஸாமா அவர்களும் உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா (ரலி) அவர்களைக் கூறவில்லை. (முர்ஸலாக அறிவித்துள்ளனர்)