«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا وَسَبْعًا، الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ»،
1214. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும்,மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் எங்களுக்கு தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுலைமான், முஸத்தத் போன்றோர் “பினா-எங்களுக்கு” என்ற வார்த்தையை கூறவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ், “மழை இல்லாத நேரத்தில்” என்ற வார்த்தையை கூடுதலாக அறிவிக்கிறார். (இது பலவீனமானது. (பார்க்க: அஹ்மத்-3235 )