🔗

அபூதாவூத்: 2051

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ، وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا: عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ، قَالَ: جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقَ؟ قَالَ : فَسَكَتَ عَنِّي، فَنَزَلَتْ: {وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ} [النور: 3] فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ: «لَا تَنْكِحْهَا»


2051. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார். (இவர் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருடைய காதலியாக இருந்தாள்.

மர்ஸத் பின் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) கூறுகிறார்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே!  நான் அனாக்கை  திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். (அதற்கு பதலளிக்காமல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது (தான்),

விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள்

எனும் (அல்குர்ஆன்: 24:3) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து அதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே! என்று கூறினார்கள்.