أَنَّ امْرَأَةً مِنَ الْمُسْلِمِينَ – وَقَالَ زُهَيْرٌ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ – أَشُدُّ ضُفُرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ لِلْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْفِنِي عَلَيْهِ ثَلَاثًا» – وَقَالَ زُهَيْرٌ: «تُحْثِي عَلَيْهِ ثَلَاثَ حَثَيَات مِنْ مَاءٍ» ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ
பாடம்: 100
(பெருந்தொடக்கை நீக்குவதற்காக) குளிக்கும் பெண் தன் பின்னல்முடியை அவிழ்க்க வேண்டுமா?
251. முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட வேண்டுமா? என்று கேட்டார்.
(இந்தக் கேள்வியை உம்மு ஸலமா (ரலி) அவர்களே, நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக ஸுஹைர் அவர்களின் அறிவிப்பில் உள்ளது)
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ மூன்று முறை இரு உள்ளங்கை நிரம்ப தண்ணீரை எடுத்து தலை மீது ஊற்று! இவ்வாறு ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும். பிறகு, உனது உடலில் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள்! நீ அப்போது தூய்மையாகி விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
…