«إِذَا أَرَادَ اللَّهُ بِالْأَمِيرِ خَيْرًا جَعَلَ لَهُ وَزِيرَ صِدْقٍ، إِنْ نَسِيَ ذَكَّرَهُ، وَإِنْ ذَكَرَ أَعَانَهُ،
وَإِذَا أَرَادَ اللَّهُ بِهِ غَيْرَ ذَلِكَ جَعَلَ لَهُ وَزِيرَ سُوءٍ، إِنْ نَسِيَ لَمْ يُذَكِّرْهُ، وَإِنْ ذَكَرَ لَمْ يُعِنْهُ»
பாடம்:
(தலைவர், தனக்கு) ஆலோசகரை ஏற்படுத்திக் கொள்வது.
2932. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒரு தலைவருக்கு நல்லதை நாடினால் அவருக்காக ஒரு உண்மையான ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.
அல்லாஹ், ஒரு தலைவருக்கு நல்லது அல்லாததை நாடினால் அவருக்காக ஒரு தீய ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தால் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டமாட்டார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிய மாட்டார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)