مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ مِنْ ذَنْبٍ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غُفِرَ لَهُ مَا أَصَابَ تِلْكَ اللَّيْلَةَ
5078. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் காலையில், “அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து, உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது ஹமலத அர்ஷிக்க, வ மலாஇகதிக, வ ஜமீஅ கல்கிக, அன்னக அன்தல்லாஹு, லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரசூலுக்”
(பொருள்: ‘இறைவா! நான் காலைப் பொழுதை அடைந்துள்ளேன். உன்னையும், உனது அர்ஷைச் சுமப்பவர்களையும், உனது மலக்குகளையும், உனது படைப்புகள் அனைவரையும் சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை, நீ தனித்தவன், உனக்கு நிகரானவர் யாருமில்லை; மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் உனது அடியாரும் தூதரும் ஆவார்கள்’)
என்று ஒருவர் கூறினால் அவர் அந்த நாளில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் மாலை நேரத்தில் இதைக் கூறினால், அந்த இரவில் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)