«مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا»
5081. ஒருவர் காலையிலும் மாலையிலும், “ஹஸ்பியல்லாஹ், லாஇலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்து, வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்” (பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்) என்று ஏழு தடவை கூறினால் அவரின் (அனைத்து) பிரச்சனைகளுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருப்பான்.
(இவ்வாறு அவர் கூறுவதில்) அவர் உண்மையாளராக இருந்தாலும் சரி! அல்லது அவர் பொய்யராக இருந்தாலும் சரி! என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்முத்தர்தா (ரலி)