🔗

அபூதாவூத்: 88

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ، وَهُوَ يَؤُمُّهُمْ، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلَاةَ، صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ قَالَ: لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ وَذَهَبَ إِلَى الْخَلَاءِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلَاءَ وَقَامَتِ الصَّلَاةُ، فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ»،


பாடம் : 43

ஒருவர் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழலாமா ?

88. அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக் காகவோ ‎புறப்பட்டார்கள். அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார். ‎ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்த தயாரானார். அப்போது அவர்களை நோக்கி, ‎உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள். ஏனெனில் உங்களில் ‎ஒருவருக்கு அவர் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது ‎ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்கு செல்வாராக! என்று அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, ‎கழிப்பிடத்திற்கு சென்று விட்டார் என உர்வா பின் ஜூபைர் (ரலி) அவர்கள் தமது ‎தந்தை ஜுபைர் (ரலி) வழியாக அறிவிக்கிறார்.‎

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்களிடமிருந்து தன் தந்தைக்கு ஒருவர் ‎அறிவித்ததாகவும் பின் தன் தந்தையார் வழியாக ஹிஷாம் பின் உர்வா அறிவித்ததாக ‎உஹைப் பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஷாக் அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் ‎அதிகமான அறிவிப்பாளர்கள் ஜுஹைர் அறிவிப்பது போன்றே அறிவிக்கின்றனர்.‎

‎(இங்கு ஜுஹைர் அவர்களின் அறிவிப்பே இடம் பெற்றுள்ளது.)‎

‎(குறிப்பு: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, அஹ்மது ஹாகிம் ஆகிய நூல்களிலும் ‎இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.)‎