«لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»
قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»
928. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் குறைவு செய்தலும் இல்லை. (பிறருக்கு) ஸலாம் கூறுவதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அஹ்மத் இமாம் கூறினார்கள்:
இந்த ஹதீஸின் பொருள் பற்றி என்னுடைய கருத்து என்னவெனில், தொழுகையில் நீங்கள் இருக்கும் போது (பிறருக்கு) ஸலாம் கூறக்கூடாது. பிறரும் உங்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதாகும்.
ஒருவர் தொழுகையில் குறைவை ஏற்படுத்தி (அதை முழுமையாக நிறைவேற்றினோமா? இல்லையா? என்ற) சந்தேகத்துடன் செல்வது தொழுவதில் குறைவு செய்வதாகும்.