🔗

அபூதாவூத்: 929

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«لَا غِرَارَ فِي تَسْلِيمٍ، وَلَا صَلَاةٍ»


929. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸலாம் கூறுவதிலும், தொழுகையிலும் குறைவு வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஆவியா பின் ஹிஷாம் அவர்கள், இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்தார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை (ஹதீஸ் எண்-928 ல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் அறிவித்த வார்த்தை அமைப்பில்) அபூமாலிக் அவர்களிடமிருந்து முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் (நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்;) நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.