🔗

alilal-ibn-abi-hatim-2436: 2436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

ثَلاثٌ لاَ يُرَدُّ : اللَّبَنُ ، وَلا الوِسادَةُ ، وَلا الدُّهنُ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


2436. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

இப்னு அபூபுதைக் அவர்கள், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் —> அவரது தந்தை —> இப்னு உமர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்து என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அதற்கு அவர்கள், ‘இது ஒரு முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தியாகும்’ என்று பதிலளித்தார்கள்.