إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ فَحَدَّثَ أَنَّ رَجُلًا تُوُفِّيَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ رَآهُ أَحَدٌ مِنْكُمْ عَلَى عَمِلٍ مِنْ أَعْمَالِ الْخَيْرِ» فَقَالَ رَجُلٌ: نَعَمْ حَرَسْتُ مَعَهُ لَيْلَةً فِي سَبِيلِ اللهِ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ فَلَمَّا أُدْخِلَ الْقَبْرَ حَثَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ مِنَ التُّرَابِ ثُمَّ قَالَ: «إِنَّ أَصْحَابَكَ يَظُنُّونَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ وَأَنَا أَشْهَدُ أَنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: «لَا تَسَلْ عَنْ أَعْمَالِ النَّاسِ وَلَكِنْ سَلْ عَنِ الْفِطْرَةِ»
பாடம்: அபூஅதிய்யா என்ற புனைப் பெயரால் அழைக்கப்படுவோர்.
அபூஅதிய்யா-?
18414. அபூஅதிய்யா-?அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அமர்ந்திருந்தபோது, மரணமடைந்த ஒரு மனிதரைப் பற்றிப் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவராவது இவர் ஏதேனும் ஒரு நற்செயலைச் செய்ததை பார்த்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஒரு மனிதர், “ஆம் (அல்லாஹ்வின் தூதரே)! நான் அவருடன் ஒருமுறை அல்லாஹ்வின் பாதையில் (போர்க்களத்தில்) இரவு நேரத்தில் காவல் புரிந்துள்ளேன்” என்று கூறினார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் (அந்த ஜனாஸாவிற்காக) எழுந்தார்கள். அந்த மனிதர் மண்ணறையில் வைக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு, “நிச்சயமாக உமது தோழர்கள் நீர் நரகவாசி என்று எண்ணுகிறார்கள்; ஆனால் நீர் சொர்க்கவாசி என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம், “உமரே! மக்களின் (வெளிப்படையான) செயல்களைப் பற்றி நீ விசாரிக்கப்பட மாட்டீர்; மாறாக அவர்களின் ‘பித்ரத்’ (எனும் இயல்பான இறைநம்பிக்கை-இஸ்லாம்) குறித்து விசாரிக்கப்படுவீர்” என்று கூறினார்கள்.