«خِيَارُكُمْ كُلُّ مُفْتَنٍ تَوَّابٍ»
700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
உங்களில் சிறந்தவர் யாரெனில், (பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்றவர்களே ஆவர்.
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை, இந்த வார்த்தையில் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று நாம் அறிகிறோம். இவரிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாகவும், வேறுசிலர் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். அப்துல்வாஹித் அவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.