إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»
பாடம்: 13
அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்.
7393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.
மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:
பிஸ்மிக ரப்பி வளஃத்து ஜன்பீ, வபிக அர்ஃபவுஹு. இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா, வஇன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
புகாரி இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை மாலிக் இமாம் அவர்களைப் போன்று (அதாவது முதாபஅத் காஸிரா அமைப்பில்) யஹ்யா பின் ஸயீத், பிஷ்ர் பின் முஃபள்ளல் ஆகிய இருவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
ஸுஹைர், அபூளம்ரா-அனஸ் பின் இயாள், இஸ்மாயீல் பின் ஸகரிய்யா ஆகிய மூவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் —> அவரின் தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
இப்னு அஜ்லான் அவர்கள் (மாலிக் இமாமைப் போன்றே) ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
அத்தியாயம்: 97