«الْفَجْرُ فَجْرَانِ فَأَمَّا الْمُسْتَطِيلُ فِي السَّمَاءِ فَلَا يَمْنَعَنَّ السَّحُورَ وَلَا تَحِلُّ فِيهِ الصَّلَاةُ , وَإِذَا اعْتَرَضَ فَقَدْ حَرُمَ الطَّعَامُ فَصَلِّ صَلَاةَ الْغَدَاةِ»
2183. அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். அடிவானில் நீளவாக்கில் செங்குத்தாய் வெண்மை தெரியும் நேரம். இது (உன்னை) ஸஹர் உணவு உண்பதிலிருந்து தடுத்துவிடவேண்டாம். மேலும் இந்த நேரத்தில் (நீ ஃபஜ்ர்) தொழுவது கூடாது.
அடிவானில் அகலவாக்கில் வெண்மை பரவிவிட்டால் (நீ ஸஹர்) உணவு உண்பது தடையாகும். இதில் நீ அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையை தொழுதுக் கொள்!.
அறிவிப்பவர்: ரபீஆ பின் யஸீத் (ரஹ்)
தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:
இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.