«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ حَتَّى يَرْجِعَ فَلَا يَقُلْ هَكَذَا، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ»
பாடம்:
தொழுகைக்குப் புறப்படும்போது விரல்களைக் கோர்ப்பதற்கு வந்துள்ள தடை.
439. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் ஒருவர் தனது வீட்டில் உளூச் செய்துகொண்டு, பின்னர் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் திரும்பும் வரை தொழுகையிலேயே இருக்கிறார். எனவே, அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.